மனிதனை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளமை

மனிதனை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளமை
இஸ்லாமிய மார்க்கம் என்பது அல்லாஹ்வின் சட்டக்கோர்வையாகும் எம்மைச் சூழ உள்ள இயற்கை அம்சங்களில் இதை நாம் கண்டுணர்ந்து கொள்ளலாம் அல்லாஹ்வின் ஏவல் காரணமாகத் தான் மலைகள், கடல்கள், கோல்கள், நட்சத்திரங்கள், இவ்வுலகிலுள்ள அணுக்கள் உட்பட அனைத்தும் ஓர் அமைப்பில் செல்கின்றன இவை அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடப்பதனாலேயே இவ்வாறு செயல்படுகின்றன ஆனால் மனிதன் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றான் அல்லாஹ் அவனுக்கு தேர்வுச் சுதந்திரத்தை வழங்கியதன் காரணமாக அவனுக்கு அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு செவிசாய்க்கும் அதே சமயம், அல்லாஹ்வுக்கு வழிபடாமல் தனக்கென ஓர் வழிமுறையை அமைத்துக்கொண்டு அதில் பயணிக்கவும் முடிகின்றது ஆனால் –கவலைக்கிடமான அம்சம்- மனிதன் இரண்டாவது தேர்வையே அதிகமாக தன் வழியாக எடுத்துக்கொள்கிறான்