அகிலத்தாருக்கெல்லாம் அருட்கொடை

அகிலத்தாருக்கெல்லாம் அருட்கொடை
முஹம்மதின் வாழ்க்கையும், அவரின் பலமும், சிந்தனையும், திடகாத்திரமும், மூடநம்பிக்கைகளுக்கெதிரான அவரின் போராட்டமும், ஓரிறைக் கொள்கையின் நாமத்தை இப்பூமியில் நிலைநாட்ட வேண்டுமென்ற அவரின் உறுதி மனப்பான்மையும் தான் தூய இஸ்லாமிய கோட்பாட்டை இவ் உலகில் தலைநிமிர்ந்து வாழ வைத்தது இவையனைத்தும் அவர் மக்களை ஏமாற்றவில்லை என்பதற்கும், தான் ஓர் போலியான வாழ்வை வாழவில்லை என்பதற்கும் ஆதாரமாகத் திகழ்கின்றன அவர் ஓர் தத்துவமேதை, பேச்சாளர், தூதர், மக்களுக்கு என்றும் நலவையே நாடுபவர், மனிதநேயத்திற்காக போராடுபவர் எதனாலும் வெற்றிகொள்ள முடியாத ஓர் கோட்பாட்டை உருவாக்கியவர் உலகில் 20 இற்கும் மேற்பட்ட தலைசிறந்த நாடுகளைத் தோற்றுவித்தவர் இவர் உருவாக்கிய உயரிய மனித நேயத்தை வேறு யார் உருவாக்கினார் இவர் பெற்ற உயர் குணாதிசியங்களை வேறு யார் பெற்றுக்கொண்டார்