மன்னிக்கவும்

மன்னிக்கவும்

மன்னிக்கவும்

மன்னிக்கவும்

நண்பர்கள் மூவராலும் இனங்கப்பட்ட நேரத்திர்கு முன்னரே ராஷித் ரஜீவையும் மைக்கலையிம் எதிர்பார்தவராக முழுதயார் நிளையில் இருந்தார் சிறிது நேரத்தின் பின் இருவறும் வந்தடைந்தனர் நண்பர்கள் தங்களுக்கிடையே வந்தனங்களை பறிமாறி கொன்டதும் றாஸித்.

நடந்த உரையாடலின் போது முஸ்லீம்களின் நடத்தை தொடர்பான ஒருவிடயத்தை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்.

ரஜீவ்: ஆம் பிறரோடு நடந்து கொள்ளும் விதத்தில் நீங்கள் நேரம் தவறுபவர்களாக மட்டுமன்றி வேறு சில நடத்தைகளிலும் மோசமானவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.

ராஷித்:அது எப்படி நான் ஏதாவது உங்களுடன் முறைகேடாக நடந்து கொன்டுடிருக்கிறேனா.

ரஜிவ்: இல்லை இல்லை மன்னிக்கவும் நான் தனிநபரை நாடவில்லை மாறாக பொதுவாக நடைபெறக்கூடிய ஒன்றை கூறினேன் நான் ஒரு தடவை உணவகம் ஒன்றிட்கு சென்றேன் அங்கே பதாகைகளில் நாய்களும், அரேபியர்களும் நுழைவது தடை என பொறிக்கப்பட்டிருந்தது அது என்னை அசொகரியத்திற்கு உள்ளாக்கவே உனவக அதிகாரியிடம் சென்று வினவினேன் அவர் வழமையைபோன்று தணது நடவடிக்கைகளில் கர்வத்துடன் தோற்றமளித்தார் எனினும் அதற்கான பதாகைகளில் பொறிக்கபட்டிருந்ததற்கான காரணங்களை முன்வைத்தார் அவருடைய உணவகத்திற்கு அமைச்சர்கள் மந்திரிகள் பெரும் தனவந்தர்கள் வழைமையாக வருவதாகவும் அன்மையில் சில அரேபிய வாலிபர்கள் உணவகத்தில் முறைகேடாக நடந்து கொன்டதாகவும் கூறினார்.

உணவகத்திற்கு வந்த வாலிபர்கள் சிலர் பணிபுரிவோருக்கு இடைஞ்சல் தரும் விதத்தில் மேசையை அங்கும் இங்குமாக அசைத்து பெரும் சப்தத்தை ஏற்படுத்தினர்.

இன்னொரு முறை கைகலப்பு ஏற்பட உரத்த சப்தத்தில் ஒருவரையொருவர் வாய்வார்த்தையால் ஏசியுள்ளனர்.

அவர்களில் சிலர் பிறரை வெறுப்பூட்டும் விதத்தில் சாப்பாட்டு தட்டில் கைவிரலை விட்டு பிசைந்து சாப்பிட்டுள்ளனர்.

இன்னும் சிலர் அதன் தட்டில்- பின்புறமாக கூர்மையான பொருட்களால் கிருக்கியுள்ளனர்.

இவ்வாறான மோசமான செயற்பாடுகளால் அவருடைய மிகப்பெரும் வாடிக்கையாளர்களை இழக்க நேரிட்டதாகவும் அரேபியர்கள் இதன்பிறகு நுளையாமலிருப்பதற்காக ஒரு முடிவுகட்டவேன்டுமென தீர்மானித்துதிருப்பதாக இப்பதாகையை மாட்டியதாகவும் கூறினார்.

றாஷித்: நீங்கள் கூறுவது பெரும்பாலும் சரியே நான் ஏழவே கூறியதை போன்று எங்களுடைய நடவடிக்கைகளினால் எங்களை பற்றி மோசமான கண்ணோட்டத்தை பிறருக்கு வழங்விட்டோம் என்றாலும் நான் மீண்டும் ஒரு விடுத்தம் கூறுவது யாதெனில் இவ்வாறான மோசமான நடவடிக்கையை இஸ்லாத்துடன் இனைத்து கூறுவது தவறாகும் .

மைக்கல்: ம் நீங்கள் இதையிம் சூழல் தாக்கத்தின் விளைவால் என்பீர்கள் போலும்.

ராஷித்: நிச்சயமாக அந்த வாளிபர்கள் வளர்ந்த தவறான வளர்ப்பு முறையுடன் சூலழ் தாக்கமும் காரணமென்பதை மறந்து விட முடியாது.

மைக்கல்: தவறான வளர்ப்பு முறையென்பது சரி இதில் சூழல் தாக்கம் எங்கிருக்கிறது என்பதுதான் எனக்கு விளங்க வில்லை.

ராஷித்: அதற்கு ஓர் உதாரணம் கூறுகிறேன் நீங்கள் புவியின் மிக்குளிரான பிரதேசத்தில் வாழ்கின்றீர்கள் குளிர் நீண்ட காலம் தொடர்ச்சியாக இருப்பதனால் மழைபொழியிம் வீதம் ,குளிர்காற்று ,பணிக்கட்டி ,மழைமுதலியன அதிகமாக ஏற்படுகின்றன இக்கால நிலையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது அவசியமாகும் அவற்றை மேற்கொள்கிந்ற போது உரிய முறையில் திட்டமிட்டு முறையாக மிக நுனுக்கமாக மேற்கொள்ள வேண்டும் உதாரணமாக வீடுகளை அமைக்கின்ற போது அதன் கூறைகளையிம் ,ஜன்னல்களையிம் குளிர்காற்று நீர் புகாதவாறு மிகப்பலமானதாகவும் இறுக்கமானதாகவும் இருக்க வேண்டும் எனவே இவை அனைத்தும் திட்டமிட்டு மிக நுணுக்கமாக மேறகொள்ளபடவேண்டும் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவை.

அதே நேரம் எங்களுடைய நாட்டில் இவ்வாறான இக்கட்டான நிலைகள் ஏற்படுவதில்லை அங்குள்ள ஒருவன் தான் உயிரவாழ்வதற்காக இவ்வாறு திட்டமிட்டு செயற்பாடுகளை சிரப்பாக மேற்கொள்ள வேண்டுமென்ற தேவையை உணரமாட்டாகள் எனவே இவ்வாறு அவன் சூழ்நிலை தாக்கத்திற்கு உள்ளாகின்ர போது அத்தாக்கம் அவனுடைய வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக மாற்றமடைகிறது அதே நேரம் எங்களுடைய பிரதேசம் வரண்ட பாளைவன சூழலாக இருப்பதால் உணர்வுகளும் அதற்கேற்றாட்போல் அமைந்திருக்கும்.

ரஜிவ்:ஆகவே ஒரு மனிதனுடைய நடத்தையில் எவ்வித திருத்தங்களையிம் மேற்கொள்ளாது சூழல் தாக்கத்திற்கு அடிபனிபவனாக அப்படியே விட்டுவிடுவதா.

ராஷித்:அப்படியல்ல மாறாக நாங்கள் கானக்கூடிய இத்தோற்றப்பாடுகளுக்கான உண்மையான காரணத்தை கண்டறியவேண்டுமென்பதற்காகவே கூறினேன்.

ரஜிவ்:மேற்கத்தய சமூகத்திற்கும் இஸ்லாமிய சமூகத்திற்கும் மிடையில் காலநிழை சூழல் மாற்றம்மிருக்குமெனின் அவர்கள் பின்பற்ற கூடிய மார்க்த்திலும் மாற்றம் இருக்கும் எனவே ஏனே தோற்றபாடுகளுக்கெல்லாம் இஸ்லாமும் ஒரு காரணம் என கூறமுடியாது.

ராஷித் நான் ஏற்கனவே உங்களுக்கு தெளிவு படுத்தியதை போன்று இஸ்லாம் ஒரு முஸ்லீமுடைய வாழ்க்கை முழுவதையிம் அல்லாஹ்வை வழிப்படவேண்டுமென்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டுமென வழியுறுத்துகிறது அது மட்டுமன்றி பிறருடன் நடந்து கொள்ளும் பண்பாடு முறை முஸ்லீம்கள் ஊடாகவே அந்துலேசியா வந்தடைந்தது என்ற விடயம் பலபேருக்கு தெறியாது அவ்வறிவை அந்தலூசியா சாம்ராச்சியம் வீழ்ச்சியடைந்த பின்னர் முஸ்லீம்களிடமிருந்து ப்ரான்ஸ் ,இத்தாலி ,பிரித்தானியா போன்ற நாடுகள் பெற்றுகொன்டு அதற்கு பல புது வடிவங்களை கொடுத்து தற்போதைய நிலைக்கு கொன்டு வந்துள்ளனர்.

மைக்கல்:இலக்காரமாக சிரித்தவராக முஸ்லீம்கள் ஆகிய நீங்கள் உங்கள் பிடிவாதத்தை எல்லா நல்ல காரியங்களையிம் உங்களுடைய மார்கத்திற்கு உரித்தாக்கி நினைக்கிறீர்கள் அது தொடர்பான ஓர் ஆய்வு தேவையென எனக்கு தெரியிம் என்றாலும் நீங்கள் கூறிய இவ்விதிமுறைகள் இஸ்லாத்தில் உள்ளனவா என்பதை தெழிவுபடுத்த வேண்டும்.

ராஷித்:இஸ்லாம் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் அனைத்து கட்டங்களையிம் செம்மைபடுத்தியுள்ளது பிறருடன் நடந்து கொள்ளும் முறை தொடர்பான விதிமுறைகள் குர்ஆனிலும் சுன்னாவிலும் ஏராளமாகவுள்ளன.

மைக்கல்:நண்பரே இது நீங்கள் வழமையாக கூறக்கூடியது இதை நம்ப வேண்டுமெனின் உதாரணங்களை கூற வேண்டுமல்லவா.

றாசித்: ஃம்ம் இதை உதாரணங்கள் கொன்டு தெழிவு படுத்துகிறேன் நபி ஸல் அவர்கள் அவர்களுடைய மனைவிமார்களுடன் குழந்தைகளுடனும் எவ்வாறு நடந்து கொன்டார்கள் என்பதை பார்ப்போம்.

ஒரு மனிதன் தணது மனைவிக்காக வாகனத்தின் கதவை திறந்து கொடுத்தால் அவரை இரக்க தன்மையிம் ,அன்பையிம் காட்டுகிறது என்போம் ஆனால் நபி ஸல் அவர்கள் தன் மனைவி ஒட்டகத்தில் ஏறுவதற்காக பூமியில் அமர்ந்து தனது கையை வைத்து தனது காலின் உதவியுடன் ஒட்டகத்தில் ஏறுமாறு வேண்டிகொன்டார்கள்.

நபி ஸல் அவர்கள் தனது மனைவி குழந்தைகள் ,பணியாட்கள் என அனைவருடனும் மென்மையாகவும் மிகக்கனிவாகவும் நடந்து கொன்டார்கள் ஒரு முறை நபியவர்கள் முஸ்லீம்களுக்காக தொழுது இமாமத் செய்யும்போது அவர் சுஜூதில் இருந்த நிலையில் அவருடைய பேரபிபள்ளைகளில் ஒருவர் முதுகில் ஏறிகொன்டார் அவர் முதுகில் இருந்து இறங்கும்வரை நபியவர்கள் அசையவே இல்லை .

இஸ்லாம் மிக மென்மையாகவும் ,பணிவாபவும் நடந்து கொள்ள வேண்டுமென வழியுறுத்தியுள்ளது நபி ஸல் அவர்கள் தோழர்களுடன் மகத்தான நபியாகவும் ,இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைவராகவும் இருந்ததோடு மிக பனிவுள்ளவராகவும் இருந்தார் அவருக்கு பல பனியாட்களும் இருந்தும் அவருடைய துணிகளை அவராகவே துவைப்பார் அவர்கள் பணியாட்களால் முடியாதவற்றை செய்யசொல்லி ஏவ மாட்டார் அப்படி ஏவினாலும் அவர்களுடன் சேர்ந்து அதற்காக உதவிசெய்வார் முஸ்லீம் அல்லாதவர்களுடன் மனிதநேயத்துடன் நடந்து கொன்டார் ஒரு முறை ஒரு யூதருடைய பிரேதம் அவரை கடந்து செல்லவே அதற்காக அவர் எழுந்து நின்றார் இதைகன்ட தோழர்கள் ஆச்சரிய முற்றனர் இறந்தவருக்காக வழங்கப்படும் மரியாதையில் மனிதர்களுக்கு மத்தியில் எவ்வித வித்தியாசமுமில்லை என்பதை அவர்களுக்கு தெழிவு படுத்தினார்.

ஒரு மனிதன் பாதையில் நடக்கும்போது கடைபிடிக்க வேண்டிய பண்பாடுகளை இஸ்லாம் காட்டிதந்துள்ளது பெருமைக்காக தலையை அளவுக்கு அதிகமாக நிமிர்த்தி நடப்பதையிம் மக்கள் இழிவானவன் என நினைக்கும் அளவு தலையை பனித்து வெட்கப்பட்டு நடப்பதையிம் தடைசெய்துள்ளது அல்குர்ஆன் இவ்வாறு நடப்பதற்கென ஒழுங்கு விதிமுறைகளை வறையறுத்துள்ளது அன்றியிம் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பி கொள்ளாதே மேலும் பூமியில் கர்வமாக நடக்காதே ,நிச்சயமாக அல்லாஹ் தற்பெருமை காரர் ,கர்வங்கொன்டோர் ஒவ்வொருவரையிம் நேசிக்கமாட்டான் மேலும் உன்நடையில் மத்திய தரத்தை கடைபிடிப்பீராக உன் சப்தத்தை தாழ்த்திகொள்வீராக ஏனென்றால் நிச்சயமாக சப்தங்களிலெல்லாம் மிக வெறுக்கத்தக்கது கழுதைகளின் சப்தமே [லுக்மான் வசனம் 18-19]

ரஜிவ்: நான் மீண்டும் அவ்வுணவக அதிகாரியை சந்தித்தால் அந்த அரெபிய வாழிபர்கள் ஏன் அவ்வாறு நடந்து கொன்டார்கள் என்பது பற்றி தெளிவான கண்ணோட்டத்தை என்னால் வழங்க முடியிமா.

ராஷித்:அது தொடர்பாக இஸ்லாமிய ஒழுங்கு விழுமியங்கள் சிலவற்றை கூறுகிறேன்.

ஒருவருக்கொருவர் அன்பை ஏற்படுத்தும் விதமாக சமூகத்திற்கு மத்தியில் இஸ்லாத்தின் கானிக்கையை பரப்புமாறு ஏவியுள்ளது ஸலாத்துக்கு பதிலளிப்பதை கடமையாக்கியுள்ள அதே நேரம் ஒருவர் உண்ணும் போது அல்லது உறங்க தயாராகும் போது அவரிடம் ஸலாம் சொல்லுவதை தடுத்துள்ளது மக்கள் உறங்கும் போது சப்தத்தை தாழ்த்தி கொள்ளுமாறும் ஏவியுள்ளது.

அவசியமின்றி உறக்க சப்தமிடுவதை குர்ஆன் வெறுத்துள்ளது உன் சப்தத்தை தாழ்த்தி கொள்வீராக ஏனெனில் சப்தங்களில் மிக வெறுக்க தக்கது கழுதையின் சப்தமே [லுக்மான்-வசனம் 1] தனது நண்பரை வீட்டுக்கு வெளியே இருந்து கூவி அழைப்பவரை சிந்தணையற்றவர் என வர்ணித்துள்ளது நபி ஸல் அவர்கள் ஒரு போதும் இன்னொருவரை விட சப்தத்தை உயர்த்தி பேசியதில்லை.

வீட்டில் ,வீட்டிற்கு வெளியே ,சாப்பிடும் இடத்தில் அமரும் இடத்தில் என அனைத்திலும் இஸ்லாம் சுத்தத்தை வழியுறுத்தியுள்ளது சாப்பிடுவதற்கான பருகுவதற்கான சில ஒழுங்கு விழுமியங்களை வரையறுத்துள்ளது கரண்டி முள்கரண்டி,கின்னங்கள் என சாப்பிட்ட உபகரணங்கள் அறிமுகமாவற்கு முன்னரே மூன்றுக்கு மேற்பட்ட விரல்களை பாவித்து சாப்பிடுவதையிம் சாப்பாட்டிதட்டில் கையை விட்டு அலைவதையிம் நபியவர்கள் வெறுத்துள்ளார்கள் சாப்பாட்டு தட்டில் மிக நெருக்கமான பகுதியில் இருந்து சாப்பிடுமாறும் வயிறுபுடைக்க சாப்பிடுவதையிம் தடுள்ளார்கள் சாப்பிடுவதை சமூக அங்கத்தவர்களுக்கு மத்தியில் பரஸ்பரத்தை ஏற்படுத்தும் ஒரு பகுதியாக ஆக்கியுள்ளார்கள் சாப்பிடும் போது கூச்சம் ஏற்படாமல் விருந்தினர்களுடன் அமர்ந்து சாப்பிடுவதை விரும்பியுள்ளார்கள் அவருடைய மனைவியருக்கு அவருடைய கையால் உணவு ஊட்டி இருக்கிறார்கள் ஒரு நபர் தன் மனைவியின் வாயில் வைக்கும் ஒரு பிடி உணவு கவளம் மிகசிறந்த அண்பளிப்பாகும் என கூறினார்கள் அவருடைய மனைவி ஆயிஷா ரழி அவர்கள் பருகிய பாத்திரத்தின் அதே பகுதியில் அவரும் பருகுவார் இஸ்லாம் சாப்பிடமுன் அல்லாஹ்வின் பெயரை மொழிய வேண்டுமேனவும் சாப்பிட்டு முடிந்த பின் அவனை புகழ வேம்டுமெனவும் ஏவியுள்ளது.

மைக்கல்:றாசித் தயவு செய்து உங்களுடைய மார்கத்திற்கு உங்களுடைய நடவடிக்கைகளுக்கும் மத்தியில் மிக பெரிய வித்தியாசம் இருக்கிறது உங்களைவிட நாங்களே உங்கள் மார்க்க போதனைக்கு நெருக்கமானவர்கள்.

ராஷித்:அதை நினைத்தால் எனக்கு கவலையாகவே உள்ளது நீங்கள் கூறுவது சரிதான்.