நிரந்தர பிரியாவிடை

 நிரந்தர பிரியாவிடை

நிரந்தர பிரியாவிடை

நிரந்தர பிரியாவிடை

மைக்கல் உறையாடல் (தகவல் பரிமாற்ற) அரையை நுழைந்தவுடனே வந்தனத்தை தெரிவித்தார். றாஷித் அதற்கு பதிலளிக்க, றாஷித் இருவறையும் நோக்கி

சற்று பொருங்கள் ....உங்கள் இருவருக்கு பரபரப்பான ஒரு காட்சியை காட்டுகிறேன்.. LIVORNO கலகத்தைச்சேர்ந்த உதைப்பந்தாட்ட வீர்ர் MAURICNA வின் இத்தாலியின் PESCAVA கலகத்திற்கெதிரான போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த வேளை இதயம் செயலிழந்து மைதானத்திலேயே உயிரிழந்த காட்சியை பார்த்தீர்களா? பார்வையாளர்களுக்கு இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியளித்தது,

மைக்கல்: ஆனால் ...FA கிண்னப்போட்டியில் TOTTENHAN கழகத்திற்கு எதிராக விளையாடிய BOTTON அணியின் விளையாட்டு வீர்ர் MWAMBA வுக்கு நிகழ்ந்ததை நினைத்து ஆச்சரியப்படுகிறேன். அவர் மைதானத்தில் இதயம் செயலிழந்து விழவே அனைவரும் அவரை இறந்து விட்டதாக நினைத்தார்கள். ஆனால் அதிஷ்டவசமாக 78 நிமிடங்களின் பின் அவருடைய இதையம் செயற்பட ஆரம்பித்தது. அவர் உயிர் பிழைத்துவிட்டார். வைத்தியர்கள் இதை 78 நிமிட கால மரணம் என்றார்கள். வைத்தியர் TOBIN இதைப்பற்றி குறிப்பிடுகையில்; ((இது நம்பமுடியாத விடயம் MWAMBA இந்த நிழைக்கு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை)) என வியந்தார், MWAMBA மரணித்து மீண்டும் ஒரு முறை உயிர்பிழைத்துள்ளார்.

ராஷித்: மனிதர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரேயொரு உண்மை மரணம் மட்டும்தான் என்றாலும் மரணத்தின் பின் என்ன? அது முடிவா? அல்லது பெரும்பாலானோர் நம்புவதைப்போன்று அது மறுமை வாழ்க்கைக்கான ஆரம்பமா?

ரஜிவ்: இறுதி நாள்பற்றிய நம்பிக்கை மனித இனம் தோன்றிய காலம் தொட்டே இருந்து வரும் அடிப்படைக்கொள்கையாகும் எகிப்தியர்கள், மாயா கோத்திரத்தினர், ரோமர்கள், மொசப்பதேமியா என பண்டய நாகரீகங்களிலும் இக்கொள்கை காணப்பட்டதற்கான வரலாற்றுச்சாதனங்கள் உள்ளன பரலோக மதங்களில் மட்டுமன்றி மனிதனால் உருவாக்கப்பட்ட வேதங்களாகிய பிரம்மா, பெளத்தம்,கண்யூச்சியா, ஸொராஸ்திரியம் ஸேபியாஃ கோள்களை வணங்குபவர்கள் ஃ என முதலியவற்றிலும் அதைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

றாஷித்: ஆம், நீங்கள் கூறுவது சரி... இஸ்லாத்தின் தூதரும் ஏனைய நபிமார்களும், தூதர்களும் இக்கொள்கையை நம்புமாறு வலியுறுத்தினார்கள் ஈமானிய நிபந்தனைகளில் ஒரு நிபந்தனையாகும் இக்கொள்கையை நம்பவில்லையெனின் இஸ்லாத்தின் ஏனைய அம்சங்களை நம்பினாலும் ஈமானாக கருதபட மாட்டாது.

மைக்கல்:என்றாலும் இக்கொள்கையின் தாக்கம் மனிதர்களுக்கிடையில் வித்தியாசபடுவதை அவதானிக்கிறேன் அவர்களில் சொற்பமானவர்களே அனைத்து நிலமைகளிலும் நம்புகிறார்கள்.

ராஷித்:ஆம் கொள்கை மட்டத்தில் அதை நம்பினாலும் நடைமுறையிலே சிலரிடம் காணப்படுகிறது உதாரணமாக யுத்தகாலத்தில் விமான தாக்குதலின் போது மக்கள் பாதைகளில் நடமாடுவதை தவிர்த்து கொள்ளுமாறு எச்சரிக்கை ஒளி எழுப்பபடுவதாக நினைத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் பாதையில் நடமாடுபவர்கள் பைத்தியம் என்று கூட நினைக்கலாம் உலகிலுள்ள இச்சிறு ஆபத்திலுருந்து இந்தளவு முன்னெச்சரிக்கையாக இருப்போமானால் இதை விட மிக தூரமான உறுதியாக நிகலும் என அனைவரும் நம்பகூடிய இறைத்தூதர்களால் எச்சரிக்கப்பட்ட ஆபத்திலுருந்து எந்தளவு முனேனெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மைக்கல்:மனிதர்கள் அவ்வாறு பராமுகமாக இருப்பதற்கான காரணம் எச்சரிக்கை ஒளி மூலம் அறிவிக்கபடும் அபாயத்தை பிற நாடுகளில் அல்லது வேறு சந்தர்ப்பத்தில் கன்ணூடாக கான்கிறார்கள் அதனூடாக முன் அனுபவத்தை பெறுகிறார்கள் ஆனால் மறுமை நாள் விடயத்தில் எங்களுக்கும் அதற்கும் மத்தியில் மரணம் ஒரு திரையாக உள்ளது எங்களில் ஒருவரும் அதை கண்டதில்லை இதுவே இவ்விரு நிலைகளுக்கு மிடையிலுள்ள வித்தியாசமாகும் .

ராஷித்:ஆம் அது சரி என்றாலும் மனிதன் வெறுமனே புலன்களை மாத்திரமின்றி சிந்தனையையிம் பயன்படுத்தி உன்மைகளை அறிந்து கொள்ள கடைமைபட்டுள்ளான் மக்களிடம் இது தொடர்பான நம்பிக்கை வலுவிழந்து காணப்படுவதற்கான காரணம் அவர்கள் சரியான முறையில் சிந்தனையை பயன்படுத்தாதே ஒரு விட.யத்தை அவர்கள் சிந்தனை ரீதியாக ஆய்வு கண்கொன்டு பார்ப்பார்களாயின் அவர்களுடைய கண்களுக்கு புலப்படுபவற்றை விட புலப்படாதவைகளே அதிகமாக நம்புவார்கள்.

அதேபோன்று இன்னும் சில விடயங்களை பற்றி ஆராய்வது ஒருவரை அழிவிற்கு இட்டு செல்லும் ஏனெனில் வாழ்க்கையின் ஒரு முறை தான் அவற்றை கடக்க முடியிம் ஒருவர் உயர்ந்த கட்டிடத்திலுருந்து எந்த பாதிப்புமின்றி தான் குதிக்க போவதாக இன்னொருவரிடம் சவால் விடுகிறார் அதற்கு மற்றவர் அவறை நோக்கி முயன்று பார் என கூறினால், அதை அவர் பயிற்சி

பெறுவாறாயின் அதுவே அவரின் முதலும் இறுதியிமான முயற்சியாக இருக்கும் எனவே இவ்வாறான விடயங்களை சுய அனுபவித்துனூடாக சரியா அல்லது தவறா என பரீசீலிக்க வேன்டிய அவசியமில்லை மாறாக சிந்தனை மற்றும் முன்னைய சம்பவங்களை ஆராய்வதனூடாக இதனால் ஏற்படும் விளைவுகளை அறிந்து கொள்ளலாம் .

ரஜிவ்: இக்கொள்கை (மறுமைநாளயை) உறுதியாக நம்ப வேண்டுமாயின் அறிவியல் ஆராய்ச்சி மூலமாகவும் சிந்தனை ரீதியான ஆதாரங்கள் மூலமாகவும் அதை சரி காண்பேம் .

ராஷித்: அதில் எந்த தடையிமில்லை ஆனாலும் ஒன்றை கூறிக்கொள்கிறேன் உறுதியாக நிகழுமென்பதற்கான மிகப் பெரும் ஆதாரம் அதை பற்றி எங்களிடம் அறிவித்தவனே அவன் வேறுயாருமில்லை அல்லாஹ் ஒருவன் மட்டுமே அவனே எங்களிடம் இறை தூதர் ஊடாக எங்களிடம் அறிவித்தான் நம்புமாறும் ஏவினான் ,எங்களுடைய நளவு ,கெடுகதிகளை பற்றி எங்களிலும் நன்கு அறிந்தவன்.

அது ஒருபுரம்மிறுக்க சிந்தனை ரீதியான ஆதாரங்களை கேட்டீர்கள் அவை நிறையவே உள்ளன.

முதல் ஆதாரம் ,ஒன்றை புதிதாக உருவாக்கல் அதை மீண்டும் உருவாக்க முடியிமென்பதற்கான ஆதாரமாகும் அதாவது அல்லாஹ்வே எங்களை எவ்வித மூலப்பொருளுமின்றி படைத்தவன் மரணித்தின் பின் எங்களை மீண்டும் உருவாக்க சக்தி மிக்கவன் என நாம் ஏற்று கொன்டால் இரன்டாம் முறையாக உயிர்பிப்பதற்கான சாத்தியம் முதல் முறையைவிட ஒப்பீட்டளவில் மிக பலமாக உள்ளது என்ற முடிவுக்கு வரலாம் .

இரண்டாவது ஆதாரம் : பொருள்களின் நிலை மாறா தன்மை இதற்கு மனிதர்கள் அனைவரோடும் தொடர்புபட்ட ஒரு உதாரனத்தை அல்குர்ஆன் போதிக்கிறது அதுதான் பச்சை மரங்களிலுருந்து நெருப்பை வெளிபடுத்தலாகும் எனவே ஒன்றின் எதிர்மறை பொருளிருந்து அதை உருவாக்க கூடிய படைப்பினங்கள் மூலக்கூறுகள் அனைத்தும் அவனை வழிப்படும் ஒருவனால் உக்கிபோன என்புகளை உயிர்பிக்க முடியிம் என்ற முடிவுகளுக்கு வரலாம்.

மூன்றாவது: மரணம் .வாழ்க்கை பின்பு மரணம் வாழ்க்கை யென்ற படைப்பினங்களின் சுழற்சிமுறை ,திடமான விதையிலிருந்து பூத்து குழுங்கும் செழிப்பான உயிறுள்ள மரங்கள் வெளியாகின்றன. பின்னர் அம்மரங்கள் திடமான வளராத விதைகளை வழங்குகின்றன அவ்வாறே வளரும் உயிருள்ள பறவைகள் இறந்த முட்டையை வெளியாக்குகின்றன பின்னர் அவ்விரந்த முட்டையிலிருந்து அசையும் உயிருள்ள பறவைகள் வெளியாகின்றன எனவே இறந்த திடமான ஒன்று என நாம் நினைக்க கூடிய ஒன்றில் வாழ்க்கை மறைந்து காணப்படுகிறது.இவ்வாறு தான் மனிதனும் ஏனைய விலங்குகளும்.

நான்காவது:மனிதன் ,விழங்குகள் ,தாவரங்கள் வாழ்க்கையில் வெளிப்படையாக நாம் காண கூடிய மரணித்து உயிர்பிக்கும் முறை சாதாரன மனித உடல் 260,000,000.000,000,000 செல்களால் ஆனது இவை ஒவ்வொன்றும் மிக வேகமாக குறைந்து சமீபாட்டு தொகுதியினூடாக உனவை பெற்று அதேவேகத்தில் உருவாகின்றன எனவே மனித உடல் ஓடும் நதியை போன்று தொடாராகவே தானாகவே மாறக்கூடியது இவ்வாறு உடலில் எந்த ஒரு பழைய செல்லும் எஞ்சியிருக்காத வகையில் எங்களுடைய உடல் தொடர்ச்சியாக மாறும் திட்டதிற்குட்பட்டது இத்திட்டம் குழந்தை ,வாலிப பருவங்களில் மிக துரிதமாக செயற்பட்டு வயோதிப வயதை அடைந்ததும் மெதுவாக தொழிற்படுகிறது இம்மாற்றம் அன்னளவாக பத்து வருடங்களுக்கு கொருமுறை நிகழ்கிறது.

இதிலிருந்து தோற்ற அமைப்பில் மனித உடல் மாற கூடியது என்ற முடிவுக்கு வரலாம் ஆனால் மனிதனுடைய அறிவு பழக்க வழக்கம் ,பேனுதல் ,நம்பிக்கை சிந்தனை போன்ற உள்ளார்ந்த அம்சங்கள் மாற்றம் அடைவதில்லை மனிதன் அவனுடைய உடல் அழிவதால் அழிபவனாக இருந்தால் குறைந்த பட்சம் அவனுடைய செல்களையாவது அழிக்கவேண்டும் வாழ்க்கை(உயிர்) உடலை விட்டும் வேறுபட்ட ஒன்று என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் தொடர்ச்சியாக செல்கள் இறந்து உடல் அழிந்தாலும் அவனுடைய வாழ்வு நிலைத்திருக்கும் .

ஐந்து: பிரபஞ்சத்தின் பகுதிகள் மனிதன் மேற்கொள்கின்ற ஒவ்வொரு செயற்பாடுகளையிம் பதியவைக்கிறது என்பதை நவீன விஞ்ஞானம் குறிப்பிடுகிறது மறுமையின் மிக பிரதான நோக்கம் உலகில் செய்த நன்மை தீமைகளுக்கு கூலி வழங்குவதாகும் பதியப்படும் அம்சங்களில் மணிதனுடைய சொல் செயல் என்னம் அனைத்தும் உள்ளடங்கும் இவைகள் எங்கும் சென்று விடாது அவற்றை மனிதன் இறந்த பின்பும் மீட்டியெடுக்கலாம் என்ற உன்மையை அறிவியல் சான்றிதழ் ஊர்ஜீதம் செய்கின்றன.

எங்கள் உள்ளத்தில் தோண்றும் என்னங்களும் ,சிந்தனைகளும் ,தூக்கத்தில் கனவாக உருவாகும் சிலவேளை நாம் சுய நினைவிழந்திருக்கும் நிலையில் எங்களை அறியாமல் அவை நினைவிற்கு வருகின்றன அவற்றை நாம் உனருகிறோம் சிந்தனை ,நினைவுகள் என்பன நாம் உணரகூடியவைகள் மட்டுமல்ல எம்மால் உணரமுடியாத சில புதிர்களுமாகும் இதிலிருந்து எங்களால் நினைத்தாலும் அவற்றை அழிக்க முடியாது என்று உறுதியான முடிவுக்கு வரலாம் அறிவியலும் இதை உன்மை படுத்துகிறது .

அதேபோன்று நாம் செவிமடுக்கும் ஒலி அலைவடிவில் காற்றில் அங்கும்மிங்குமாக உலாவுகின்றன அழியாத நிலாயிலுள்ள இவ்வொலி அலைகளை பல நூற்றான்டுகள் கடந்த பின்னரும் செவிமடுக்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானம் நம்புகிறது ஆய்வாளர்கள் அதை பரிசோதனை மூலம் இன்று வரை உறுதிபடுத்தவில்லை ஆயினும் மனிதனால் எழுப்பப்படும் ஒவ்வொரு ஒலியிம் பதியப்படும் என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.

செயற்பாடுகளை எடுத்துகொன்டால் இரவிலோ அல்லது வெளிச்சத்திலோ நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாடுகளும் இடங்களில் உருவமைப்பில் சேமிக்க படுகின்றன என்பதை நவீன விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது உலகிலுள்ள உயிருள்ள உயிரற்ற பொருட்கள் என அனைத்திலிருந்தும் அவை அசைகின்ற போதும் அசையாமல் திடமாக இருக்கின்ற போதும் வெப்ப கதிர்கள் வெளியாகின்றன இக்கதிர்களை படம்பிடிப்பதற்காக மிக நுன்னிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆயினும் அக்கருவிகளால் அகிகதிர்களை ஒரு நிகழ்வின் பின்னர் சிறிது நேரம் வரையே படம் பிடித்து காட்டமுடியிம் எப்படியோ எங்களுடைய செயல்கள் எங்களை அறியாமலே பதியபடுகின்றன மறுமை நாள் நிகழும் என்பதற்கு இதுவொரு அறிவு பூர்வமான ஆதாரமாகும்.

மைக்கல்: ம்... அது நிகழுமென உறுதியாக நாம் நம்பினால் இஸ்லாத்தில் அதைபற்றி என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுக்குங்கள்.

ராஷித்: மறுமைநாளை பற்றி இஸ்லாத்தின் குறிப்புகள் ஏனைய மதங்களை விட்டும் அதிகளவில் வேறுபட்டவை என்றாலும் அதை சுறுக்கமாக சொல்கிறேன்.

01.மறுமை நாளில் அல்லாஹ் இவ்வுலகம் மற்றும் அதிலுள்ள அனைத்து உயிரினங்களையிம் அழிப்பான்.

02.பின்பு அவற்றை உயிர்பித்து அவன் முன் ஒன்று திரட்டுவான் அதுவே” யவ்முல் ஹஷ்ர்” ஒன்றுதிரட்டப்படும் நாளாகும் .

03.பின்பு மனிதர்கள் அனைவரும் தாங்கள் புரிந்த அனைத்து செயற்பாடுகளும் எவ்வித கூட்டலோ குறைத்தலோயின்றி இறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த படுவர்.

04.அல்லாஹ் ஒவ்வொருவருடைய நற்செயலையிம் தீச்செயல்களையிம் நிறுப்பான் எவருடைய நனைமையின எடை கூடுகிறதோ அவர்களை அவன் மன்னிப்பான் எவருடைய தீமையின் எடை கூடுகிறதோ அவர்களை அவன் தண்டிப்பான் .

05.அவன் மன்னிப்பவர்களை சுவர்கத்திலும் ,தண்டிப்பவர்களை நரகத்தில் நுழைவிப்பான்.

ரஜிவ்: உன்மையாகவோ பயங்கரமான ஒன்று.




Tags: